18

siruppiddy

ஜூன் 07, 2013

கோரிக்கையினை கானல் நீராக மாற்ற விளையும்


முன்னாள் யுத்த வளையங்களில் முதல் முறையாக நடைப்பெறவிருக்கும் மாகாண சபை தேர்தல்களில் சபைகளிற்கான அதிகாரங்களை குறைப்பதற்கு அதாவது பெரும்பான்மையான தமிழர்களின் சுயாட்சி அதிகார கோரிக்கையினை நிராகரிக்கும் வகையில் இலங்கைய் அரசாங்கம் எத்தனிப்பதான உள்நாட்டு அரசியல் தலைவரொருவர் வியாழனன்று தெரிவித்தார் என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீல விடுதலைப்புலிகளை உள்நாட்டில் தோற்கடித்து இராணுவ வெற்றியினை கொண்டாடிய இலங்கை அரசாங்கமானது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை தமிழர்களுடன் பகிர்வதற்கு இணக்கம் தெரிவித்த நிலையில் வடமாகாண சபை தேர்தலை நடாத்த முன்வந்தது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கமானது இன்று வரை தமிழர்களின் தாயக பூமியில் ஒரு தேர்தலையேனும் நடாத்தவில்லை.
இந்திய மற்றும் மேலைத்தேய நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக இவ்வருட புரட்டாதி மாதத்தில் வட மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் குறைந்தளவு அதிகாரங்களை வழங்குவதற்கே இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த செவ்வாய்யன்று இடம்பெற்ற ஆளும்கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் பொழுது கட்சி உறுப்பினர்கள் 13ம் திருத்தச்சட்டத்தை உள்நாட்டில் அமுல்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
13ம் திருத்தச்சட்டமானது வரையறுக்கப்பட்ட சுயாட்சி அதிகாரங்களையே மாகாண சபைகளிற்கு முன்மொழிகின்றது.
1987ம் ஆண்டு இலங்கை கூட்டாட்சி முறையினை உள்வாங்கியது எனினும் வட மாகாணத்தில் ஒரு தேர்தலையேனும் நடாத்தவில்லை. ஜனாதிபதி ராஜபக்சவின் நேரடி ஆட்சியின் கீழும் இந்நிலையே தொடர்ந்தது. எது எவ்வாறாயினும் சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்ற பகுதிகளில் மாகாண சபை நடைமுறையிலுள்ளது.
ஜனாதிபதியின் மைத்துனரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நாட்டிற்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலின் நிமித்தம் வடமாகாண சபையிற்கு குறைந்தளவு அதிகாரங்களே வழங்கப்பட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பொழுது தெரிவித்தார்.
இம்மாகாண சபை முறையானது அந்நிய தேசமான இந்தியாவுடனான ஒப்பந்தம் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. அதாவது தமிழீல விடுதலைப்புலிகளிற்கு தங்களுடைய தாயகத்தை ஆள்வதற்கான சுயாட்சி அரசியல் அதிகாரத்தை கொழும்பு சிறுபான்மை தமிழர்களுடன் பகிர தயாரென குறிப்பிடப்பட்டிருந்தது.
கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் மாற்றுக் கொள்கைகளிற்கான அமையமானது இலங்கை தற்பொழுது முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஒரு பொழுதும் கடைநிலையிலுள்ள இனமுரண்பாட்டிற்கு தீர்வினை வழங்காது என தெரிவித்துள்ளது.
ஒரு தலைப்பட்சமான இவ் அதிகார பகிர்வானது மேலுமொரு வரலாற்று தவறிற்கு வழிகோலுமென அந்நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி போரில் இடம்பெற்ற யுத்த குற்றச்செயல்கள் மட்டிலான விசாரணை மற்றும் நல்லிணக்க செயன் முறையிலுள்ள பின்னடைவு தொடர்பாக தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களை இலங்கை முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
இலங்கை யுத்தக் குற்றச்செயல் தொடர்பான அழுத்தங்களை நிராகரித்துள்ளதுடன் 40 000 சிவிலியன்கள் மாத்திரமே கொள்ளப்பட்டு உள்ளனரென அறிவித்துள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக