18

siruppiddy

ஜூன் 30, 2013

அதிபர்களுக்கான படைபயிற்சியை நிறுத்தவும்!

 சிறீலங்காவில் பள்ளிக்கூட அதிபர்களுக்கு படை பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கூட அதிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 28 ஆம் திகதி ரந்தம்பை என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட படைபயிற்சிநெறியில் உடற்பயிற்சிக்காக காலையில் 2...

மக்களுக்கான நலன்கள் குறித்து கிழக்கு மாகாண சபை கவனம்

போர்ச் சூழல் நில­விய காலத்தில் பல்­வே­று­பட்ட இழப்­புக்­களை சந்­தித்தும் அடிக்­கடி உள்­ளக இடம்­பெ­யர்­வு­க­ளுக்கு ஆளா­கியும் வாழ்ந்த அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள காஞ்­சி­ரங்­குடா, தங்­க­வே­லா­யு­த­புரம் கிராம மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­துள்ள போதிலும் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­படும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கைகள் முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னை­யிட்டு கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என மாகாண சபை உறுப்­பினர் எம்....

தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு?

  யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை,...

மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்க தாமதம்

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் தாமதமடைந்துவருவதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவிக்கிறார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தபோதே, இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதாக அவர் கூறினார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில்...

அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!

 சிறீலங்காவில் வெளிநாட்டுப் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அண்மைய பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைய மாதங்களாக சிறீலங்காவில் வெளிநாட்டு பிரஜைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுஇலங்கைப் பொதுப் பயணிகள் பஸ்களில் அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பெண்கள் தனியான பயணங்களை...

ஜூன் 29, 2013

சிரியாவில் இருவர் தலை துண்டித்து படுகொலை

சிரியாவில் ஜனாதிபதி பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆயுதமேந்தியும் போராடி வருகின்றனர். ஆயுதப் போராளிகளை நசுக்கி வீழ்த்த பஷீர் அல் ஆசாத் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் மோதல்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்....

ஜூன் 28, 2013

களுத்துறையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட !

 உக்ரென் பிரஜைகள் கைது சிறீலங்காவின் தென்பகுதியான களுத்துறை கட்டுக்கொரந்த பகுதியில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று உக்ரென் நாட்டுப்பிரஜைகள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். குறித்த மூவரும் கட்டுக்கொரந்த பகுதியில் உள்ள வங்கியில் இருந்து கடனட்டைமூலம் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துள்ளார்கள் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட வங்கியின் காவலாளி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களிடம் இருந்து 8இலட்சம்...

பாதசாரிக் கடவையில் பதிக்கப்படும் கல்லை எடுத்து ?

    பாதசாரிக் கடவையில் பதிக்கப்பட்டுள்ள கல்லை எடுத்துக் காட்டி கொழும்பு மாநகர சபையில் சர்ச்சையை கிளப்பிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் ரோய் நிஷாந்த போகாவத்த, வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது அது தொடர்பில் மாநகரசபை மீள் பரீசிலனை செய்ய வேண்டுமென்றும் சபையில் கோரிக்கை விடுத்தார். கொழும்பு மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபைக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கூடியபோதே உறுப்பினர்...

ஜூன் 27, 2013

மஹிந்தருக்கு எதிரான சதி முயற்சியின் பின்னணியில் சந்திரிக்கா!

தமிழர்களுக்கு அரசியல் பலம் சேர்க்கும் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆளும்கட்சி உறுப்பினர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்த விவகாரம், மஹிந்த அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சட்டமூலத்தை பலவீனப்படும் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் பின்னணில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

ஜூன் 26, 2013

கிளைஸ் நட்சத்திரத்தினை சுற்றி வரும் மூன்று பூமிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு அருகே தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் கிளைஸ் 667சி நட்சத்திரம் ஒன்றினை மூன்று கோள்கள் (பூமிகள்) சுற்றிவருவதை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த நட்சத்திரத்தை அடைய 22 ஒளி ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் இந்த மூன்று பூமிகளும் சுற்றி வருகின்றன. சூரியனைவிட மூன்றில் ஒரு பங்கு அளவுடைய இந்த நட்சத்திரத்தை இந்த பூமிகள் சுற்றிவருகிறபோது...

ஜூன் 25, 2013

பட்டினி போட்டு 2 பச்சிளம் குழந்தைகளை கொன்ற தாய்

சீனாவில் போதை மருந்துக்கு அடிமையான தாய் ஒருவர், பட்டினி போட்டு 2 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங் புறநகரைச் சேர்ந்த பெண் லீ. இவருக்கு 1 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது கணவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லீ-யும் போதை மருந்து அடிமையானதால், குழந்தைகளை சரிவர கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தார். அவர்களுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்காமல் இருந்ததால்,...

பாலியல் தொந்தரவால் மூன்றில் ஒரு பெண் உயிரிழப்பு: அதிர்ச்சி ?

.   உலகம் முழுவதும் 3ல் ஒரு பெண் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆய்வும், கருத்துக் கணிப்பும் நடைபெற்றது கடந்த 1983ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை குடும்பங்களில் வன்முறை என்ற தலைப்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 86 நாடுகளில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பெண்கள்,...

தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில்

நடைபெறும் சாத்தியம் வட மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் முதல் இருவாரத்திற்குள் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், போதிய கால அவகாசம் இல்லை. ஆனால், செப்டெம்பர் 21அல்லது 28ஆம் திகதியே சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆனால், அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசு அறிவிப்பின் பின்னரே ஏனைய விடயங்களை முன்னெடுக்க முடியும்...

ஜூன் 24, 2013

வெலிங்டன் முகாமிலிருந்து இலங்கை அதிகாரிகள் வெளியேற்றமா?

 தொடர் போராட்டம் காரணமாக குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ மையத்தில் இலங்கை இராணுவ அதிகரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்...

அமைதிக்கு பங்கம் அலறுகிறார் ஆரியசிங்க !

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.  வெளிநாடுகள், இலங்கையை பகைக்கும் வகையிலான பிரச்சாரங்களின் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.  2013ஆம் ஆண்டிற்கான சர்வதேச அபிவிருத்தி கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  சர்வதேச நாடுகள் பலவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது புலம்பெயர் தமிழர்கள்...

ஜூன் 22, 2013

ராஜினாமாவை வாபஸ் பெற்ற பாலஸ்தீன பிரதமர்

 கடந்த 20-ம்திகதி திடீரென ராஜினாமா பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, முன்னாள் பிரதமர் சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, இரு வாரங்களுக்கு முன்னர் ரமி ஹம்தல்லாவை புதிய பிரதமராக அதிபர் நியமித்தார். அவருக்கு துணையாக மேலும் 2 துணை பிரதமர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தனது பதவியை ரமி ஹம்தல்லா ராஜினாமா செய்தார்....

ஜூன் 21, 2013

குடும்பநல வரிச்சலுகை திட்டம் அறிமுகம்

ஜெர்மன் நாட்டின் புதுமனத்தம்பதிகளுக்காக வழங்கப்படும் வரிச்சலுகை குடும்பமாக வாழ்பவர்களுக்கு கிடைக்குமாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வியாழக்கிழமையன்று குடும்ப நலத்துறை அமைச்சர் கிறிஸ்டினா ஷ்ரோடர் (Christina roder) தெரிவித்துள்ளார்.மேலும் இச்சட்டம் குறித்து அவர் கூறுகையில், தற்போதைய நடை முறையின் கீழ் ஒரு குடும்பத்தில் இருவரும் சம்பாதிக்கின்றனர். எனவே அவர்களுடைய வருமானமானது இரண்டாக பிரிக்கப்பட்டு இருவரும் தனித்தனியே வரி செலுத்தவேண்டும். அதன்...

பயணத்தை தவிர்க்க ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

இந்தியாவில் தற்பொழுது மோசமான வானிலை நிலவுவதால் இந்திய பயணத்தை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலியா அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- "இந்தியாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அக்டோபர் மாதம் வரை யாரும் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். ஏற்கனவே, அங்கு சென்றுள்ள...

சின்னங்கள் அழியும் அபாயம்: யுனெஸ்கோ எச்சரிக்கை

சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக  நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்கள், மக்களின் வாழ்க்கையை பாதித்தது மட்டுமின்றி, அங்குள்ள புராதனமான பாரம்பரியம் மிக்க கலை சின்னங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இடையூறாது ஒலிக்கும் துப்பாக்கி, குண்டு முழக்கங்களும், போர் நடவடிக்கைகளும், பலவீனமான பாதுகாவல்களும் இந்த புராதன கலைச்சின்னங்களின் உலக மதிப்பைக் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ மேற்கொள்ளவிடாமல் செய்கின்றன என்று யுனெஸ்கோ...

ஜூன் 20, 2013

தனித்துவத்தை சிதைக்கும் முயற்சியில் கோத்தபாய!

  தமிழர்கள் கொண்டுள்ள தனியுரிமையை உடைத்து, அனைத்து மக்களையும் கொண்ட பகுதியை உருவாக்கும் முயற்சியில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இறங்கியுள்ளதாக தெரிகிறது.   கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கோத்தபாய வழங்கிய செவ்வியின் மூலம் இந்த திட்டம் அம்பலமாகியுள்ளது.  அந்த ஊடகத்திற்கு அவர் தெரிவித்ததாவது, "யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும்...

கற்பழித்த கொடூரனுக்கு குவைத்தில் தூக்கு தண்டனை

எகிப்தை சேர்ந்த 33 வயதான ஹஜாத்காடி என்பவன் குவைத் நகரில் தங்கியிருந்த போது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தான்.இந்த காம கொடூரனை பிடிக்க பொலிசார் தேடி வந்ததை அறிந்த அவன் குவைத்தை விட்டு விமானத்தில் தப்பிக்க முயன்ற போது அவனை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்தனர். கடந்த 2007ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்...

ஜூன் 19, 2013

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும்

 திட்டத்தை இந்தியா விரும்பவில்லை – TNA  13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டத்தை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்கள் குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்....

ஜூன் 18, 2013

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் - சம்பிக்க ரணவக்க !!

  13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.  வடக்கில் தேர்தலை நடாத்தி பிரபாகரனுக்கு ஆதரவானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், அதன் பிரதிபலன்களை அனைவரும் எதிர்நோக்க நேரிடும்.  சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு போதியளவு...

ஜூன் 17, 2013

11 வயது மாணவன் பெண்ணை கர்ப்பமாக்கிய, பரபரப்பு

நியூசிலாந்தில் 36 வயது பெண்ணை கர்ப்பமாக்கி உள்ள 11 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவை தான் கர்ப்பமாக்கி உள்ளான். இதனையடுத்து அப்பெண் மீது கற்பழிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் நியூசிலாந்தில் ஆண்களுக்கு உள்ள சட்டம் போன்று, பெண்களை தண்டிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பையனின் பள்ளி முதல்வர்...

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தமணி ,,

மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு. இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன். 2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார்....

விபத்தில் 5 வயது மகளுடன் பலியான தந்தை

  3 வயது மகள் உயிருக்கு போராட்டம் கனடாவின் பிரம்டன் நகரில் நடைபெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள்.காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதுடன், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த தம்பதிக்கு...

ஜூன் 14, 2013

பிறந்த குழந்தைக்கு கிடைத்த பரிசு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரிச்மான்ட் நகரத்தின் ஷாப்பிங் மால் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த கர்ப்பிணிப் பெண் அங்கு ஒரு ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.கடைத்தொகுதி பாதுகாப்பு அதிகாரி 911 ஐ அழைத்ததாகவும் தீயணைப்பு பிரிவினர் வரும்முன் அப்பெண் பிரசவித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. துணை மருத்துவ பிரிவினர் வரும் முன்னர் குழந்தை பிறந்ததால் தீயணைப்பு படையினர் சிசுவின் தொப்புள் கொடியை வெட்ட வேண்டியிருந்தது. வியாபாரிகள் ஏராளமான பரிசுப்பொருட்களை...

ஜூன் 12, 2013

வெளிவந்த ஸ்ரீசாந்த்: கண்ணீர் மல்க பேட்டி

ஐ.பி.எல் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் சூதாட்ட தரகர்கள் 16 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பினை வழங்கியுள்ளது. 27 நாட்கள் சிறைக்கு பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து ஸ்ரீசாந்த் நேற்று விடுதலையானார். அவர் தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள கொச்சிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் ரசிகர்களும், உறவினர்களும் அவரை வரவேற்றனர். கொச்சி விமான நிலையத்தில் ஸ்ரீசாந்த் நிருபர்களுக்கு கண்ணீர் மல்க அளித்த பேட்டியில்,...

குறி வைத்து காத்திருக்கும் அமெரிக்கா! "

சிறிலங்காவின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.   சிறிலங்காவில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.  நேற்று நியுயோர்க்கில் ஐ.நா செயலகத்தில், இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளருக்கு...

ஜூன் 11, 2013

வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர்

வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பி, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். "திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா...

தலைவர் எல்.கே. அத்வானி ராஜினாமா

  இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் அவரது பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டது. தொடர்புடைய விடயங்கள்பாஜக, அத்வானிஅவரது வழிகாட்டல் கட்சிக்கு இப்போதுதான் முன்னரைவிட கூடுதலாக தேவைப்படுகிறது என்று கட்சியின் அதியுயர் குழுவான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு கூறியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற...

ஜூன் 09, 2013

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் விபத்து:

 70 பேர் மாயம் இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக குடியேற 70 பேர்கள் படகு மூலம் சென்றுள்ளனர்.அவர்கள் சென்ற படகு கடந்த வெள்ளியன்று கிறுஸ்துமஸ் தீவிலிருந்து 65-வது கடல் மைலில் விபத்துக்குள்ளானது. அங்கு இறந்து மிதந்த உடல்களை மறு நாள் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது. இதையடுத்து 9 பேரின் உடல்கள் மட்டும் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டது. மேலும் 60க்கு மேற்பட்டோர் இதில் மூழ்கி இறந்து...

ஜூன் 07, 2013

அரசியல் தீர்வொன்றை இறக்குமதி செய்ய முடியாது! இந்திய குழுவிடம்

                                                                                                          ...

அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் அவசரமாக

கொழும்பில் இருந்து முக்கிய விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் கட்டுபொத்த பகுதியில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் ஹென்ரி விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். “பெல் 412 ரக ஹெலிகொப்டர்” என்ற ஹெலிக்கொப்டரே கட்டுபொத்த மைதானத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டுள்ளத...

கோரிக்கையினை கானல் நீராக மாற்ற விளையும்

முன்னாள் யுத்த வளையங்களில் முதல் முறையாக நடைப்பெறவிருக்கும் மாகாண சபை தேர்தல்களில் சபைகளிற்கான அதிகாரங்களை குறைப்பதற்கு அதாவது பெரும்பான்மையான தமிழர்களின் சுயாட்சி அதிகார கோரிக்கையினை நிராகரிக்கும் வகையில் இலங்கைய் அரசாங்கம் எத்தனிப்பதான உள்நாட்டு அரசியல் தலைவரொருவர் வியாழனன்று தெரிவித்தார் என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீல விடுதலைப்புலிகளை உள்நாட்டில் தோற்கடித்து இராணுவ வெற்றியினை கொண்டாடிய இலங்கை அரசாங்கமானது...

கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ :

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் ௲ (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார். இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின்...

ஜூன் 06, 2013

பணக்கார சுவிஸ் குடிமகன் Ikeaலிருந்து விலகல்

சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர்.லாசேனுக்கு அருகில் உள்ள எப்லிங்ஸ் வசித்து வரும் இவர் இளைய தலைமுறைக்கு வழி விடும் வகையில் தனது இளைய மகனான மேத்யாஸ் கம்பிராட்டிடம் (43) தலைவர் பொறுப்பை கொடுத்துள்ளார். இது விலக வேண்டிய சரியான தருணம் என்று கூறியுள்ளார் 87 வயதான இங்க்வார். இவருடைய சொத்து மதிப்பு கடந்த வருடம் கணக்கீட்டீன் படி 39 பில்லியன் பிராங்க்...

இராணுவ முகாமில் தமிழ் இளம் பெண் சடலம் -

 கிளிநொச்சி இராணுவ முகாமில் தமிழ் இளம் பெண் சடலம் - இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது,  கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார். கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துரைச்சாமி – சரோஜா என்ற இவர் சீ.எஸ்.டி எனப்படும்...

ஜூன் 04, 2013

உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உறவுகள்

   சுவிஸ் கிறபுண்டன் மாநிலத்தில் வசிக்கும் நண்பர்களின் முயற்சியால் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது .அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை(hamilton bonaduz swiss) ஒன்றின்உள்ள சிற்றுண்டி ஒன்றில் வேலை செய்த பணத்தை எமது உறவுகளுக்கு மகா தேவா ஆச்சிரம் ஊடாக கொடுக்கப்பட்டுள்ளது .மின் வசதி இல்லாத பாடசாலைக்கு சூரியகதிர் வீசசினால் பெறப்படும்  மின்வசதிக்கொடுத்து அம்மாணவர்கள் படிப்பற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளனஇவர்களுக்கு...

ஜூன் 03, 2013

மூன்றாவது உலகப் போருக்கான களமாக???

மும்பாயில் நவம்பர் 2008 நடந்த தாக்குதலின் முக்கிய அல் கய்தா சூத்திரதாரி சிறீலங்காவிலிருந்து சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. அண்மைக் காலமாக சீனாவினதும் ஈரானினதும் நீர்மூழ்கி கப்பல்களும் ஆயுதக் கப்பல்களும் சிறீலங்கா துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறது. அதேவேளை, சீனாவின் புலனாய்வுப் பிரிவின் மூத்த தளபதி அண்மையில் சிறீலங்காவுக்கு திடீர் விஜயம் செய்ததோடு யாழ் கோட்டை பகுதிக்கும் அதிரடி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதற்கான உரிய காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை....

விமானப்படை முகாமில் வெடி விபத்து

அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்இன்று (03) அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.  இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்...

ஜூன் 02, 2013

தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு வர ++

 ஜாதிக ஹெல உறுமய சார்பில் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு நீண்ட காலமெடுக்கும் என்று நாடாளுமன்ற பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். இந்த தனிநபர் பிரேரணை இப்போது தான் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டு அதன் பின்னர் ஒழுங்குப் பத்திரத்தில்...

அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட**

 ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்படும் புதிய அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நுவரெலியா தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சந்தனலால் கருணாரட்னவின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்த...